Tuesday, May 15, 2012

காதலை சொன்னபின்...!

காதலின் நினைவுகள் அழிந்துவிடாது
கனவுகள் கண்களை மூடவிடாது!
காற்றும் காதலும் வேலியைபோட்டு
காவல் காப்பதால் மறைந்துவிடாது!
உதட்டுக்கு சாயம்பூசி சிவப்பாக்கும் பெண்ணே!
உள்ளம் மட்டும் கருப்பாக ஏன் விட்டுவிட்டாய்?
உன்னிடம் காதலை உளறாமல் சொல்லியும்
உண்மையோடு உன் உணர்வையும் ஏன் மறைத்தாய்?
காசு கேட்டால் பிச்சை போடுவாய்!
காதலை கேட்டால் பிய்த்துக்கொண்டு ஓடுவாய்!
கண்டவரைக் கவரும் கண்களை உனக்கு தந்தான்
கருணையை தர அந்த கடவுளும் மறந்துவிட்டான்!

பெண்ணே!
உன்னிடம் என் காதலைப்பற்றி
உரைத்தது கொஞ்சம் மறைத்தது அதிகம்!
சூரியன் எங்கேயோ உதிக்க அந்த கதிர்கள் இங்கே விடிவதுபோலே
தொலைவிலே உன்னைக் கண்டதும் என் மனம் பிரகாசிப்பதும் ஏனோ?
பாரதியோ கம்பனோ துணைக்கு வரவில்லை,
தனியாக உன்னிடம் வந்து மாட்டிக் கொண்டேன்!
பேச்சுப்போட்டியில் வாங்கிய அத்தனை விருதுகளும்
பலனற்று போயின உன் பார்வையின் முன்னே!
கடவுளை வேண்டிக்கொண்டு காதலை சொன்னபோது உன்
கண்ணிமை துடித்த துடிப்பினிலே என் உடலே சற்று அதிர்ந்ததடீ!
காதலையும் சொல்லிவிட்டேன் கண்களையும் பார்த்துவிட்டேன்
இரண்டுமே வெற்றிதான் இப்போதைய சூழ்நிலைக்கு!
ஒன்றுமே சொல்லாமல் திரும்பிசென்றாலும்
ஒரப்பார்வை ஒன்று பார்த்தாயே! அதுவே போதும்!
காத்திருப்பேன் என்றும்…
என் காதலிக்காகவும் அவள் காதலுக்காகவும்…!

1 comment: