Thursday, January 26, 2012

நான் ஏன் பிறந்தேன்? (கன்னிக் கவிதை)

காசுபணம் சேர்ப்பதற்க்கும் காமப்பசி தீர்ப்பதற்க்கும்
பகை என்னும் பேர்சொல்லி பலிநூறு கொள்வதற்க்கும்
கஞ்சமும் வஞ்சமும் நெஞ்சகத்தில் மிஞ்சமாய்
மனசு விற்று பிழைப்பதற்கா மனிதனாக நான் பிறந்தேன்?

அன்பும் அஹிம்சையும் அளந்து வைத்த பாதையிலே,
இம்மியளவு பிசகாமல் இறுதிவரை வாழ்ந்திடுவேன்.
உடல் என்னும் வாகனத்தை உயிர் நீங்கிப்போகும் முன்,
இல்லாதோர் உறுபசிக்கு இருப்பதை உவந்திடவேன்!

No comments:

Post a Comment