Saturday, November 2, 2013

காலைல ஒரு கிஸ்...

தோழியைப் பார்க்கவந்த இடத்தில் சுகுணாவிற்கு மனதில் ஒன்று பட்டது. திருமணவீடு, நண்பர்கள்வீடு, கோயில் என எங்கு சந்தித்துக்கொண்டாலும் தன் கணவனைப்போல மனைவியை கவனிக்க உலகில் ஆளே இல்லை என நண்பர்களிடம் வாய் ஓயாமல் புகழ்ந்துதள்ளிக்கொண்டே இருக்கிறாளே இந்த காயத்திரி. நேரடியாகவே கேட்டுவிடவேண்டியதுதான். 'நீ சொல்றதயெல்லாம கவனிச்சுட்டுதாண்டி வாறேன். அப்பிடி ஒண்ணும் பெரிசா இல்லையே... ஒரு சாதாரண வேலைதானே பாக்கறார். கார்கூட இல்ல. சொந்தவீடு இருந்தாலும் அவ்ளோ பெரிய வீடில்லியே இது. சம்பளமும் அவரோட ப்ரண்ட்ஷவிட குறைவாத்தானே இருக்கு. சொஷைடில அவ்ளோ கலந்துக்கறதும் இல்ல. எந்த ஒரு கிளப்லயும் மெம்பர் இல்ல. ஸ்டைலா ட்ரெஸ் பண்றதும் இல்ல. எந்த பார்ட்டிலயும் கலந்துக்குறது இல்ல. ஐஃபோன், காலக்‌ஷி மாதிரி காஷ்ட்லி ஃபோன் இல்ல. சிங்கிங்க், டான்ஸிங்க் மாதிரி எக்ஸ்ட்ரா ஆக்டிவிடீஸும் இல்ல... எதவச்சு உன் வீட்டுகாரர்தான் பெஸ்ட்னு சொல்ற?'

காய்கறி வெட்டிட்டு இருந்த காயத்திரி சுகுணாவ பொறுமையா பார்த்து 'காலைல எழுந்திரிச்சதும் ஒரு கிஸ், உண்மையா ஒரு ஐ லவ் யூ, ஆபிஸ் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வாறது, சமையல்ல ஹெல்ப் பண்றது, டைய்லி ஒண்ணா ஒக்காந்து சாப்பிட்றது, எனக்கு தலைவலின்னா தலைதேய்ச்சுவிட்டு தோள்ள சாய்ச்சுக்கிறது, என்ன முடிவுன்னாலும் என்கிட்ட கலந்து பேசறது, வீக்லி ஒருக்கா பீச், மன்த்லி ஒருக்கா வெளியூர் டூர், குடி,சிகரட் இல்ல, தேவல்லாம ஒரு ரூபா செலவழிக்குறது இல்ல. முக்கியமான எந்த பொண்ணையும் திரும்பிப் பாக்குறது இல்ல. இப்பிடி ஒரு புருஷன்கிடைச்சா வாழ்நாள்முழுக்க தூக்கி தலைல வச்சு கொண்டாடலாம். உன் வீட்டுக்காரர நீயும் பெருமையா பேசு! நான் வேணாங்கலையே...' சுகுணா அமைதியானாள்.

No comments:

Post a Comment