Saturday, October 26, 2013

நின்னைச் சரணடைந்தேன்!!!


ராகம் - புன்னாக வராளி

பல்லவி
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !

சரணங்கள்
 
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னைச்)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தனகொன்றவை போக்கென்று (நின்னைச்)

 
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்னைச்)

 
துன்ப மினியில்லைசோர்வில்லைதோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்னைச்)

 
நல்லது தீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக ! தீமையை ஓட்டுக ! (நின்னைச்)





No comments:

Post a Comment